Tuesday, January 27, 2009

கணக்கு புரியவில்லை எனக்கு

காலணி வாங்கியதற்கு
இருநூறு ரூபாய் தந்து விட்டு
பாட்டா கடையில் கேட்காத
அந்த மீதி ஐந்து பைசாவை
கீரைக்காரியிடம்
ஒரு ரூபாய் தந்து விட்டு
அம்மா கேட்டாள் -
கணக்கு புரியவில்லை எனக்கு.